வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள் இன்று திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது.
வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.அதேபோல வவுனியா நகரப்பகுயில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் கடந்த ஒருவாரமாக அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அவற்றில் பசார்வீதி,தர்மலிங்கம் வீதி,சந்தைவீதி, கந்தசாமிகோவில் வீதி,மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகள் இன்றுகாலை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வியாபாரநிலையங்கள் மற்றும் தினச்சந்தை ஆகியன திறக்கப்படாதநிலையில் குறித்த வீதியால் பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் நகரின் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காலையிலேயே அதிகமான பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகரிற்குள் வருகைதந்துள்ளமையை அவதானிக்கமுடிவதுடன் அனேகமான பாடசாலைகளில் மாணவர் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா